என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை: எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தை கட்டமைக்கும் பணியில் ராணுவம்
Byமாலை மலர்31 Oct 2017 7:43 AM GMT (Updated: 31 Oct 2017 7:43 AM GMT)
மராட்டியம் மாநிலம் எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டு 23 பேர் பலியான நிலையில், தற்போது அங்கு புதிய பாலம் அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர்.
மும்பை:
மராட்டியம் மாநிலம் மும்பை அருகே உள்ள எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் மற்றும் மாநில அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தவறான வதந்தி காரணமாக நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அந்த இடத்தை மாநில முதல்வர் பட்நாவிஸ், பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், புதிய நடைமேம்பாலம் கட்டும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். மேலும், இரண்டு புறநகர் ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி மாதம் இறுதிக்குள் புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என பட்நாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மராட்டியம் மாநிலம் மும்பை அருகே உள்ள எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் மற்றும் மாநில அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தவறான வதந்தி காரணமாக நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அந்த இடத்தை மாநில முதல்வர் பட்நாவிஸ், பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், புதிய நடைமேம்பாலம் கட்டும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். மேலும், இரண்டு புறநகர் ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி மாதம் இறுதிக்குள் புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என பட்நாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X