என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு
Byமாலை மலர்31 Aug 2017 5:25 AM GMT (Updated: 31 Aug 2017 5:25 AM GMT)
திருமலை அடுத்த பாபவிநாசனம் செல்லும் சாலையில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை:
‘பாம்பு’ என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதேபோல், திருப்பதி- திருமலையில் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மலைப்பாம்புகள், கொடிய விஷம் உள்ள பாம்புகள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று திருமலையை அடுத்த பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபம் அருகில் பக்தர்கள் அதிகமாக நடமாடி கொண்டிருந்த பகுதியில் கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அந்தப் பாம்பை பார்த்த புரோகிதர்கள், தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர்நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு, பக்தர்கள் கூட்டத்தினிடையே படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டார்.
மேலும் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் முகாம் அலுவலகத்தில் 5 அடி நீளத்தில் பாம்பு ஒன்று நுழைந்திருந்தது. அந்தப் பாம்பையும் பிடித்து அவர் காட்டில் கொண்டு போய் விட்டார்.
பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அடிக்கடி மலைப்பாம்புகள், கொடிய விஷம் உள்ள பாம்புகள் புகுந்து விடும் சம்பவத்தால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
‘பாம்பு’ என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதேபோல், திருப்பதி- திருமலையில் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மலைப்பாம்புகள், கொடிய விஷம் உள்ள பாம்புகள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று திருமலையை அடுத்த பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபம் அருகில் பக்தர்கள் அதிகமாக நடமாடி கொண்டிருந்த பகுதியில் கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அந்தப் பாம்பை பார்த்த புரோகிதர்கள், தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர்நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு, பக்தர்கள் கூட்டத்தினிடையே படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டார்.
மேலும் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் முகாம் அலுவலகத்தில் 5 அடி நீளத்தில் பாம்பு ஒன்று நுழைந்திருந்தது. அந்தப் பாம்பையும் பிடித்து அவர் காட்டில் கொண்டு போய் விட்டார்.
பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அடிக்கடி மலைப்பாம்புகள், கொடிய விஷம் உள்ள பாம்புகள் புகுந்து விடும் சம்பவத்தால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X