என் மலர்
இந்தியா

டெல்லியில் கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை: மணிக்கணக்கில் சாலையில் கிடந்த உடல்கள்
- மோதல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி முகுந்த்பூரில் உள்ள கார்கில்காலனி, சம்தாவிகார் காலனியில் இரு கோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர்.
இந்த மோதலில் ஆசாத் என்பவர் கத்திக்குத்தில் இறந்தார். ஹிமான்ஷி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் சம்பவ இடத்துக்கு வராததால் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்கள் பல மணி நேரம் ரத்த வெள்ளத்தில் அப்படியே கிடந்தது.
போலீஸ் நிலைய எல்லைப்பிரச்சினை காரணமாக போலீசார் தாமதமாக தான் அங்கு வந்து சேர்ந்தனர். அதன் பிறகு தான் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






