என் மலர்
கதம்பம்

சைவம் - அசைவம்
- சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
- அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..
தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.
தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.
மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்..
நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.
ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!
எங்கே தவறு நடந்தது?
நாக்கு தான்.
வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!
மாமிசம் மனித உணவா? ஆராய்ச்சி செய்வோம்.
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனைபோல் தட்டையாக அமைந்துள்ளன. அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும். அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்போன்றே பதினைந்து அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும்இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு.
அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறு ஏற்றாற்போல ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம் உள்ளது.
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது.
அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழஆசைப்படுகிறான்.
அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினைஅனுமதிக்காது.
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்.
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.
மனிதன் அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான். சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை?
உதாரணமாக சோயா பீன்ஸில் நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட நான்கு மடங்கும் அதிகமாகும்.
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியில் அறிய வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே!
எனவே, மனிதன் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, பொறுமையாக, பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமல், மன இறுக்கம், மலச்சிக்கல், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவான் எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.
-சசிகலா ராமகிருஷ்ணன்






