என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
உறவும் நட்பும்...
- ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
- நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..
பெண்ணுக்கு செய்த
முறைமாமன் சீரில்
மூன்று கிராம்
குறைந்ததற்கு
மூக்கு சிந்தி அழுது போன
மூத்தவள்
இன்று வரை -
பேசவில்லை
சீமந்தக்காப்பு
சின்னதாய் இருந்தது கண்டு
கோபித்துக்கொண்ட
சின்னவள்
இன்றுவரை -
பேசவில்லை
சின்னமச்சானுக்கு கொடுத்த
சீர்வரிசைத்தட்டில்
இருந்த
பட்டுவேட்டியின்
விலை பார்த்து
விரக்தி சிரிப்போடு போன
பெரிய மச்சான்
இன்றுவரை -
பேசவில்லை
பிறந்த அன்றே
தன் குழந்தையை
பார்க்க வரவில்லை என்று
கோபித்துக்கொண்ட
பெரிய தம்பியும்
இரண்டு முறை
அழைத்தும்
அலைபேசியை
எடுக்காத காரணஞ்சொல்லி
சின்னதம்பியும்
இன்றுவரை -
பேசுவதில்லை
மருமகளுடனான
சண்டையில்
நான்
மனைவிபக்கமே இருப்பதாக
ஒரு காரணஞ்சொல்லி
பெற்றவளும்
இன்றுவரை -
பேசுவதில்லை
அழைப்பிதழ் கொடுக்க
நேரில் வராமல்
அலைபேசியில் மட்டுமே
தகவல் சொல்லி
அழைத்த
அவமானம் தாங்காமல்
உறவுக்காரர்கள் பலரிடம்
நானும் -
பேசுவதில்லை....
இப்படியாக...
என்னைச் சுற்றியே
ஏராள காரணங்கள்
என்னைப்
பேசவிடாமல் வைத்திருக்க...
நேற்றிரவு
நண்பன் அழைத்தான்
அலைபேசியில்..
முப்பதாண்டுகளுக்கு முன்
பிரிந்துபோன
நண்பர்கள் எல்லாம்
கூடிப்பேச
ஏற்பாடு செய்திருப்பதாக...
இதோ நான்-
கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!
-அழ. இரஜினிகாந்தன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்