என் மலர்
கதம்பம்

திருமணம் தாமதமானால்..
- வாலிப வயதில் திருமணம் என்பது உணர்வுகளுக்கு மதிப்பளித்து உணர்வை நிர்வகிக்கும் அழகிய செயல்.
- உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காததால் பிண்டம் அழிய தொடங்குகிறது.
பசி, தாகம், தூக்கம், மலம், கல்வி போன்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் பிண்டம் அதாவது உடல் அழியும். தாமத திருமணம் என்பது பாலியல் உணர்வை மழுங்கடிக்கும்.. வயதுக்கு வந்தவுடன் உருவாகும் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் வீரியத்தில் உயர்ந்தநிலையில் இருக்கும். ஆண்டுகள் செல்ல செல்ல அதன் வீரியம் குறைந்து கொண்டே வரும்.
வாலிப வயதில் திருமணம் என்பது உணர்வுகளுக்கு மதிப்பளித்து உணர்வை நிர்வகிக்கும் அழகிய செயல். உணர்வுகளுக்குய் மதிப்பளிக்கும் போது பிண்டம் வலுபெறும் அதாவது வாலிப திருமணம் உடலை வழுபெற செய்யும். தாமத திருமணம் அதாவது மழுங்கடிக்கபட்ட உணர்வு உடலை வழுவிலக்க செய்யும். உடலை மட்டுமல்ல மனதையும் பிறல செய்யும். பசியின் போது சாப்பிடாமல் இருந்தால் கோபம் வருவதுபோலதான் கல்வி உணர்வின் போது இணை சேராமல் இருந்ததால் கோபம் பயம் பதட்டம் வருகிறது.
உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காததால் பிண்டம் அழிய தொடங்குகிறது. உடலில் பலம் குறைகிறது. உடலில் பலம் இல்லை என்றால் மனதிலும் பலம் இருக்காது. பாதிக்கும் மேற்பட்ட மனபிரச்சனைகளுக்கு முறையற்ற பாலியல் சிந்தனையும் கல்வி உணர்வுக்கு மதிப்பு கொடுக்காததே காரணம்.
-ரியாஸ்






