search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    மனதின் இருப்பிடம்...
    X

    மனதின் இருப்பிடம்...

    • ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.
    • புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் ஞானேந்திரியங்கள் ஆகும். இந்த ஐந்து புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள், உண்டு.

    பரிணாமத்தில் கடைசிப் புலனாக, ஆறாவது புலனாக வந்தது மனமாகும். மற்ற ஐந்து புலன்களின் வேலைகளையும் தானே தனித்து ஒருங்கே செய்ய ஏற்பட்ட முழுமையான புலன் மனமே ஆகும்.

    ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அது புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

    மனமானது தனக்கான இருப்பிடத்தை விட்டு எப்போதும் ஐம்புலன்களைப் பற்றி வெளியே ஓடிய வண்ணம் இருக்கிறது. ஆம். ஒவ்வொரு வினாடியும் மனம் வெளியே ஓடி ஏதாவது ஒன்றைப் பற்றிய வண்ணமே இருக்கிறது. இதுவே மனதின் இயல்பு.

    -தென்னம்பட்டு ஏகாம்பரம்

    Next Story
    ×