என் மலர்
கதம்பம்

இரண்டு முகம்
- சுற்றுமுற்றும் பார்த்து டால்ஸ்டாய் இருப்பதைக் கண்டுகொண்டார்.
- நீ இங்கிருந்ததை நான் கவனிக்கவே இல்லை” என்று சொல்லி மிரட்டினார்.
டால்ஸ்டாய் ஒருநாள் சர்ச்சுக்குப் போனார். அதிகாலை நேரம். ஊரிலேயே பெரும் பணக்காரர் ஒருவர், அந்த அதிகாலை இருட்டில் மண்டி போட்டுத் தான் ஒரு பாவி என்று சொல்லிப் புலம்பித் தொழுது கொண்டிருந்தார்.
இவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. சுவாரசியமாகவும் பட்டது. அந்தப் பணக்காரர் தன் மனைவிக்குத் தான் செய்த துரோகத்தை எல்லாம் சொல்லிப் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.
டால்ஸ்டாயின் வியப்பு அதிகமாகிப் போய்விட்டது. நெருங்கிப் போனார். அந்தப் பணக்காரர் கம்பீரமாகக் கடவுளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
"நான் பாவி, நீங்கள் என்னை மன்னிக்கவில்லையென்றால் எனக்கு வேறு வழியே இல்லை. எப்படிச் சுரண்டிக் கொண்டிருந்துவிட்டேன். எப்படியெல்லாம் மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்துவிட்டேன். நான் ஒரு பாவி. எப்படி என்னைத் திருத்திக் கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லை. உங்கள் கருணை எனக்கு இல்லாமல் போய்விட்டால் எனக்கு ஈடேற்றமே இல்லை." கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
திடீரென வேறு ஒருவர் இருப்பதைத் தெரிந்துகொண்டார். சுற்றுமுற்றும் பார்த்து டால்ஸ்டாய் இருப்பதைக் கண்டுகொண்டார். விடிந்து வெளிச்சம் அதற்குள் வந்துவிட்டது.
டால்ஸ்டாயிடம் கோபத்தோடு.."நான் சொன்னதெல்லாம் கடவுளிடம்தான் உன்னிடமல்ல. நான் சொன்னதை வேறு யாரிடமாவது சொன்னால் உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்துவிட்டுவிடுவேன், மான நஷ்ட வழக்குப் போடுவேன், கேட்டதை எல்லாம் அப்படியே மறந்துவிடு. எனக்கும் கடவுளுக்குமான நேரிடையான பேச்சு இது, நீ இங்கிருந்ததை நான் கவனிக்கவே இல்லை" என்று சொல்லி மிரட்டினார்.
இப்படி கடவுளுக்கு ஒரு முகம். உலகத்துக்கு ஒரு முகம். இது ஏமாற்று வேலை. அடுத்தவர்களை மட்டுமல்ல, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
-ஓஷோ.






