என் மலர்tooltip icon

    கதம்பம்

    போக்குவரத்து நெரிசலை குறைக்க நல்ல ஐடியா
    X

    போக்குவரத்து நெரிசலை குறைக்க நல்ல ஐடியா

    • போக்குவரத்து நெரிசல் தாங்க முடியவில்லை.
    • மக்கள் அதை எல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

    மக்கள் திடீரென என்ன நடந்தது என தெரியாமல் விழித்தார்கள்.

    வடகிழக்கு சீனாவின் சாங்சூன் நகரம். (Changchun) பீகிங்குக்கு வடக்கே மஞ்சூரியாவில் உள்ளது. சமீப ஆண்டுகளில் இந்த நகரில் கார்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. போக்குவரத்து நெரிசல் தாங்க முடியவில்லை. புதியதாக பாலங்களை கட்டி, சாலைகளை மேம்படுத்துவதை விட கார்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்தால் என்ன?

    கார்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கமுடியும்? நகர நிர்வாகம் ரகசியமாக திட்டம் ஒன்றை தீட்டியது. மெதுவாக நகரத்தில் இருந்த பார்க்கிங் பகுதிகளை குறைத்தார்கள். மார்க்கட், சாலையோரங்களில் கார் பார்க்கிங் செய்ய இருந்த பகுதிகளின் வெள்ளைக்கோடுகள் அழிக்கபட்டன. மக்கள் அதை எல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல கார்களை நிறுத்திக்கொண்டு இருந்தார்கள்.

    சுமார் 24,000 பார்க்கிங் பகுதிகள் இப்படி அழிக்கப்பட்டன. அதன்பின் சரமாரியாக கார்களுக்கு பைன் போட ஆரம்பித்தார்கள். பார்க்கிங் பகுதியில் நிற்காத ஒவ்வொரு காருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் ஃபைன். இரவு 10 மணி, நள்ளிரவு, அதிகாலை 4 மணி என சரமாரியாக நேரம் காலம் பார்க்காமல் ஆபிஸ், வீடு, அபார்ட்மெண்ட் என ஒவ்வொரு இடத்திலும் ஃபைன் போட்டார்கள்.

    மக்கள் திடீரென என்ன நடந்தது என தெரியாமல் விழித்தார்கள். ஆனால் ஃபைன்கள் குவியவும் பார்க்கிங் பகுதிகளுக்கு பெரிய அடிதடி நடந்தது. பார்க்கிஙுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு எல்லாம் வந்தார்கள். ஒரு எல்லைக்கு மேல் கார்களை வீட்டில் நிறுத்திவிட்டு எல்லாரும் பேருந்துகளில் செல்ல ஆரம்பித்தார்கள்.

    கார்களை வைத்திருப்பவர்கள் பலரும் காரை பக்கத்து ஊர்களுக்கு கொண்டுபோய் சொந்தக்காரர்கள் வீடுகளில் விட்டுவிட்டு வந்தார்கள். ஊரை விட்டு ஓடமுடிந்தவர்கள் ஓடினார்கள். கேரேஜ்களில் மாதவாடகை கொடுத்து நிறுத்தினார்கள். ஆபிஸில் நிறுத்திவிட்டு நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

    ஒரு மாதத்தில் 3 லட்சம் பேருக்கு டிக்கட் கொடுக்கபட்டு, கார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து நகர தெருக்கள் மீண்டும் கொரொனா வந்து ஊரடங்கு உத்தரவு போட்டது போல இருக்கின்றனவாம்.

    "கார் வேணாம்னா வேணாம்னு சொல்லுங்கய்யா. அதுக்காக இப்படியா?" என புலம்பியபடி மக்கள் நடந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

    பரவாயில்லை. சீனாவில் எல்லாம் ரொம்ப வித்தியாசமா தான் சிந்திக்கறாங்க..

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×