என் மலர்
கதம்பம்

இளமையின் ரகசியம்
- யுத்த வியூகங்களை அமைப்பதில் கெட்டிக்காரன்.
- பகைவர்கள் இவற்றைக் கவர்ந்து விடுவார்கள் என்று அடிக்கடி கணக்கிடுவேன்.
மனம், தேகம் இரண்டையும் எப்போதும் தெம்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யும் போது தானாவே இளமையாகி விடுவோம் .
நெப்போலியன் ஒரு முறை எதிரி நாட்டின் மீது படையெடுத்தான். எதிரி நாட்டின் தளபதியை அவனது வீரர்கள் கைது செய்து நெப்போலியன் எதிரே நிறுத்தி, மன்னா.. இவன் சாதாரணமானவன் இல்லை. யுத்த வியூகங்களை அமைப்பதில் கெட்டிக்காரன். இவனை காவல் காக்க வேண்டும். இல்லையெனில் தப்பிவிடுவான் என்று சொன்னார்கள்.
புருவம் உயர்த்திய நெப்போலியன் "உனக்கு என்ன வயது" என்று கேட்க… அவனோ யோசித்து "ஐம்பது அறுபது இருக்கலாம்" என்றான். சிரித்த நெப்போலியன், "உன்னைப் பற்றி இவ்ளோ பெருமையா பேசறாங்க. ஆனா உன் வயசே உனக்குத் தெரியலையா? குத்துமதிப்பா சொல்றியே"ன்னு கேட்க.
இதற்கு அந்த தளபதி என்ன சொன்னான் தெரியுமா?
"என் படையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன? எவ்வளவு வாகனங்கள் உள்ளன? ஆயுதங்களின் எண்ணிக்கை.. இவற்றைக் கேட்டால், துல்லியமாகச் சொல்வேன். ஏனென்றால், பகைவர்கள் இவற்றைக் கவர்ந்து விடுவார்கள் என்று அடிக்கடி கணக்கிடுவேன். ஆனால், என் வயதை எந்தப் பகைவனாலும் கவர்ந்து செல்ல முடியாது. ஆகவே, வயது குறித்து சிந்திப்பதும் இல்லை. பயப்படுவதும் இல்லை. ! என்றானாம்.
இந்த மனநிலையில் வாழ்ந்தால் என்றும் இளமையாக திகழலாம்.
-பராஞ்சி சங்கர்






