என் மலர்
கதம்பம்

அமாவாசையில் பிறப்பவர் எப்படி..
- திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.
- எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை திதியிலும், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.
தாய் கிரகமான சந்திரன் மறைவதால், தாயின் அரவணைப்பு அமாவாசையில் பிறந்தவர்களுக்கு குறையும் என்பது சாஸ்திரநம்பிக்கை ஆதலால் தாயின் அரவனைப்பில் வளராத ஆணாக இருந்தால் திருடராகவும்,பெண்ணாக இருந்தால் நல்லொழுக்கம் இல்லாதவராக இருப்பார் என்பது வழிவழியாக வந்த செய்தியாகும்.
திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழந்திருக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த திதி செளம்ய தோஷமும் இருக்காது.
அதனால் இவர்களுக்கு மூளை பலம் அதிகம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாமல் செய்வார்கள்.
சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவர்களது திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனால் அவர்களை தலைக் கனம் பிடித்தவர்கள் என்று கூறுவர்.
அமாவாசையில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு மன வருத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான்.. சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.
நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலும் இன்னும் நல்லவராக அமைந்திருக்கலாமே என்று எண்ணுவர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை நேசிப்பவர்களாக இருப்பர்.
-ஜோதிடர் சுப்பிரமணியன்.






