என் மலர்
கதம்பம்

தாலாட்டும் மந்திரமும்
- தூங்காமல் சேட்டை செய்கிற சிறு குழந்தையும் தாலாட்டு பாடலை கேட்டதும் உறங்கி விடுகிறது.
- உனது ஆழ்ந்த நம்பிக்கையின் படியே அமைந்து விடும்.
தாலாட்டு பாடல் எளிமையானது. மந்திரங்கள் போலவே ஒரிரு வரிகள்தான்.
'ஆரிரரோ..' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வரும். அதில்,குழந்தை அமைதியாக தூங்கிவிடும்.
ஒரு வார்த்தை, ஒருமுறை வரும்போது மட்டுமே அது வார்த்தை.
திரும்பத்திரும்ப வரும்போது அது வெறும் வார்த்தை மட்டுமல்ல..
அது மெல்ல மெல்ல உடலில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தும்.
தொடர்ந்து உச்சரிக்கப்படும் வார்த்தைகள், உடம்பில் வேதியியல் தன்மையை மாற்றுகிறது. இது அறிவியல் உண்மை. அதனால், தூங்காமல் சேட்டை செய்கிற சிறு குழந்தையும் தாலாட்டு பாடலை கேட்டதும் உறங்கி விடுகிறது. இது மின்னாற்றலுக்குரிய நிகழ்வு.
ஒரு குறிப்பிட்ட வார்த்தை, நமது கவலை உணர்வை சரி செய்து விடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை முன்பே இருந்தால், அதற்கேற்றது போல், அந்த வார்த்தை ஏற்படுத்தும் வேதியியல் மாற்றம் செயல்படும்.
' ராம்... ராம்....' என்று திரும்பத்திரும்ப உச்சரிக்கும்போது, அது ஏற்படுத்தும் அதிர்வுகள் வேதனையை தணிப்பதாகவும் தேவையில்லாத உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதாகவும் நினைக்கிற, உனது ஆழ்ந்த நம்பிக்கையின் படியே அமைந்து விடும்.
குழந்தைக்கு அதன் தாய் பாடுகிற தாலாட்டுப் போலவே, மந்திரங்கள் உங்களுக்குள் ஒரு ரீங்கார அதிர்வை ஏற்படுத்தவே செய்யும்.
-ஓஷோ






