என் மலர்tooltip icon

    கதம்பம்

    தானமும் தர்மமும்
    X

    தானமும் தர்மமும்

    • தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது.
    • பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.

    தானம், தர்மம் என்கிறார்களே?

    அப்படியென்றால் என்ன?

    இந்த கதை பிரமாணத்தை படியுங்கள்...

    சூரியபகவான், சிவ பெருமானிடம் கேட்டார்.

    பரம்பொருளே, பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணன், கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

    இறை சிரித்தது... தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.புண்ணியக் கணக்கில் சேராது.

    ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும்.

    பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

    கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

    எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க, ஈசனை வணங்கி நின்றார் சூரியத் தேவன்.

    கேட்டு கொடுப்பது தானம்!

    கேட்காமல் அளிப்பது தர்மம்!

    -சாது சுப்பிரமணி

    Next Story
    ×