என் மலர்
கதம்பம்

குடும்ப நலம் பேணும் வழி
- மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
- குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பம், நல்ல பல்கலைக்கழகமாக திகழ சில வழிமுறைகள்..
*கணவன், மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
* குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்ய விடக்கூடாது.
* வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
* ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதைக் காப்பது, பகிர்வது, செலவிடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
* கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்னைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
* குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.
* பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
* தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடி மனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
* நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்..!
-வேதாத்ரி மகரிஷி






