என் மலர்
கதம்பம்

அறம் செய்ய விரும்பு!
- புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்.
- புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம்,
பணத்தை செலவு செய்வோம்,
எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம்.
புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்...
எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும்.
நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...
மகிழ்ச்சியாக செய்வோம்...
எனவே, ஔவை பாட்டி சொன்னாள்...
"அறம் செய்ய விரும்பு" என்று.
விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம்,
மீண்டும் மீண்டும் செய்வோம்,
தேடி தேடி போய் செய்வோம்...
அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, ஔவை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்.
அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...
அற வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான, தர்ம வழியில் நிற்றல் என்று பொருள்.
அற வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும்.
எனவே அறம் செய்ய விரும்புங்கள்.!
- பரஞ்சோதி சந்திரமோகன்






