என் மலர்
கதம்பம்

குட்டி பிரபஞ்சம்!
- பிரபஞ்சத்தில் உயிர்வாழும் நிலம்தான் பூமி.
- உடல் நல பிரச்சனைக்கு தேவையான மூலிகை மருந்து செடிகளையும் படைத்திருக்கும்.
பெண்ணின் கருமுட்டை நிலவு.
ஆணின் உயிரணு சூரியன்.
நிலாவும் சூரியனும் இருக்கும் இடத்தில்தான் உயிர் உருவாகும்.
ஒவ்வொரு குழந்தையும் குட்டி பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தின் நகல்தான் குழந்தைகள்.
பிரபஞ்சத்தில் உயிர்வாழும் நிலம்தான் பூமி. குழந்தையின் நிலம்தான் வயிறு.
அக்குழந்தை எங்கு பிறக்கிறதோ, எங்கு வளர்கிறதோ அந்த நிலத்தில் விளையும் உணவு பொருட்கள்தான் அக்குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வடநாட்டவர்க்கு அரிசி ஜீரணமாகாது. தமிழ் நாட்டவர்க்கு கோதுமை ஜீரணம்ஆகாது. வேறு இடத்தில் விளைந்த உணவை அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் அமிலம் அதிகம் உண்டாகும்.
குழந்தை எங்கு பிறக்கிறதோ அது சார்ந்த இடத்திலே உணவை பிரபஞ்சம் படைத்திருக்கும். கூடவே அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் நல பிரச்சனைக்கு தேவையான மூலிகை மருந்து செடிகளையும் படைத்திருக்கும்.
-ரியாஸ்






