என் மலர்tooltip icon

    கதம்பம்

    புல்லானாலும்...
    X

    புல்லானாலும்...

    • நாட்டுக்கென்று போரிட்ட வீரர்களின் நடுகற்களை வழிபடுவது மரபு.
    • நடுகற்களே கடவுள், வேறு எதுவும் கடவுள் இல்லை என்றும் கொண்டாடுவார்கள்.

    'புல்லானாலும் புருசன், கல்லானாலும் கணவன்' என்பது பழமொழி.

    'ஃபுல் ஆனாலும் புருசன், கள் ஆனாலும் கணவன்' என்பது புதுமொழி!

    போரில் இறந்து கணவன் நடுகல் ஆகிவிட்டாலும் அவன் கணவனே என்று மயிற்பீலி சூட்டி வழிபடுவர்.

    நாட்டுக்கென்று போரிட்ட வீரர்களின் நடுகற்களை வழிபடுவது மரபு. நடுகற்களே கடவுள், வேறு எதுவும் கடவுள் இல்லை என்றும் கொண்டாடுவார்கள்.

    காக்கை போன்ற பறவைகளை விரட்டப் புற்களும் வைக்கோலும் கொண்டு செய்யப்படும் பொம்மை புல் ஆள் - புல்லாள் என்று அழைக்கப்படும். அப்படிப்பட்டவனாய் இருந்தாலும் (புல்லானாலும்) அவன் கணவன் தானே என்று பழமொழி விளக்கம் கூறுவர்.

    - ஆ அரிமாப்பாமகன்

    Next Story
    ×