என் மலர்tooltip icon

    கதம்பம்

    துறைமுகத்தில் கிடைத்த முத்து!
    X

    துறைமுகத்தில் கிடைத்த முத்து!

    • ஓய்வு நேரங்களில் அவர் அருகில் உள்ள நூலகத்துக்கு செல்வது வழக்கம்.
    • பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அனுப்பியிருந்தனர்.

    கணிதமேதை ராமானுஜம் பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். கணிதத்தில் அவர் புலி. ஆனால் அவர் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியடைந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா.. மூன்று முறை அவர் ஆங்கிலப்பாடத்தில் தோல்வியடைந்தார். அதனால் அவர் உயர்கல்வி படிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர் சென்னை துறைமுகத்தில் கிளர்க்காக வேலைக்குச் சேர்ந்தார். அப்படிபட்டவர் எப்படி உலகம் போற்றும் கணிதமேதையாக ஆனார் தெரியுமா..?

    ஓய்வு நேரங்களில் அவர் அருகில் உள்ள நூலகத்துக்கு செல்வது வழக்கம். அங்கே வெளிநாட்டு பத்திரிகைகளும் இருக்கும். ஒரு பத்திரிகையில் லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் ஒரு கணிதத்தை போட்டு, அதற்கு விடை தெரிந்தவர்கள் எழுதி அனுப்பலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனைப் படித்த ராமானுஜம் அந்த கணக்கின் விடையை எழுதி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் போன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அனுப்பியிருந்தனர். அதில் ராமானுஜம் எழுதியது தான் சரியான விடையாக இருந்தது.

    இந்த விடையை எழுதிய ராமானுஜம் ஒரு கல்லூரி பேராசிரியராகத்தான் இருப்பார் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் எண்ணினார். ராமானுஜம் எழுதியிருந்த கடிதத்தில் துறைமுக கிளர்க் என குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவருடையத் திறமையைப் பாராட்டி கடிதம் எழுதியவர், உடனே சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

    அதில் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் கணிதமேதை உங்கள் பல்கலைக்கழகத்தில் இல்லை. உங்கள் பல்கலைக்கு எதிரே உள்ள துறைமுகத்தில் கிளர்க் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் ஒரு பேராசிரியரை சென்னைக்கு அனுப்பி ராமானுஜத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வரவழைத்தார். ராமானுஜம் தேர்வு எழுதாமலே அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட கணித மேதை ராமானுஜம்.

    -அருள் பிரகாஷ்

    Next Story
    ×