என் மலர்tooltip icon

    கதம்பம்

    இதயம் ஒரு கோவில்!
    X

    இதயம் ஒரு கோவில்!

    • மனிதனால் கட்டப்பட்ட அந்த கட்டடங்கள் வேறு வேறாகத் தான் இருக்கின்றன.
    • இறைவன் தான் குடியேற வேண்டியே மனிதனின் இதயத்தைப் படைத்துள்ளான்.

    "மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அத்தனை பேரும் இறைவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும் மதங்கள் மாறுபட்டாலும் அவர்கள் தேடும் பொருள் ஒன்றுதான்."- ரூமி

    ஆனால், அவர்கள் தேடும் அந்த ஒரு பொருள், ஒவ்வொருவரின் இதயத் துள்ளும் இருக்கிறது. ஆனால் அவர்களோ, அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இறைவன் தான் குடியேற வேண்டியே மனிதனின் இதயத்தைப் படைத்துள்ளான்.

    ஆனால் மனிதனோ, தன் கரங்களால் கட்டப்பட்ட கோவில்கள் - தேவாலயங்கள்- மசூதிகள் முதலான கட்டடங்களினுள்ளே தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.

    ஆனால், மனிதனால் கட்டப்பட்ட அந்த கட்டடங்கள் வேறு வேறாகத் தான் இருக்கின்றன. அவற்றுள் உள்ள கடவுளரும் வேறுவேறாகத் தான் இருக்கிறார்கள்.

    ஆனால் இறைவன், தான் குடியேற வேண்டியே ஆசை ஆசையாக அவரால் கட்டப்பெற்ற உங்கள் இதயமென்னும் கோவிலோ, எல்லோருக்கும் ஒன்றுபோல் தான் இருக்கின்றது. அதில் குடியிருக்கும் இறைவனும் துளிகூட மாற்றமில்லாது அனைவரிடத்தும் ஒன்றுபோல் இருக்கின்றான்.

    உயிருள்ள, ஒளிநிறைந்த உங்கள் இதயத்தில் வாசம் செய்யும் உயிர்க் கடவுளை விட்டு விட்டு, நீங்கள் எங்கு போய்த் தேடினாலும் அந்த உயிர்க் கடவுளை உங்களால் கண்டுகொள்ள முடியாது.

    -சாலை மக்காமா

    Next Story
    ×