என் மலர்tooltip icon

    கதம்பம்

    நிகழ்காலத்தல் மட்டும் வாழுங்கள்
    X

    நிகழ்காலத்தல் மட்டும் வாழுங்கள்

    • இறையாற்றலின் தன்மை ஒரு செங்குத்துக் கோட்டின் நிகழ்வாக உள்ளது.
    • மூன்று காலத்தின் அசைவுகள் ஒரு கிடைக்கோட்டின் செயல்பாடுகளாக விளங்குகிறது.

    அன்பு ஓஷோ, ' நிகழ் காலத்தில் வாழுங்கள் என்று பலமுறை நீங்கள் அழுத்தமாக சொல்கிறீர்கள். அதன் காரணத்தை அருள்கூர்ந்து விளக்குங்கள்.

    ஓஷோ : மூன்று காலங்களில், நிகழ்காலத்தில் மட்டும் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

    கடந்த கால நிகழ்வுகளின் கவலைகள்..

    அல்லது எதிர்காலம் பற்றிய கற்பனைகள்..

    இவை இரண்டும் தான் உங்கள் வாழ்க்கையாகி விட்டது.

    உண்மையில், மனிதர்களின் எண்ணம், செயல் இவை இரண்டும் நிகழ்காலத்தில் இருந்தால் தான் வாழ்க்கையின் சுவை தெரியும்.

    இயற்கையில், எதிர்காலம் தான், நிகழ்கால மாகி, அது உடனே கடந்த காலமாக மாறி கொண்டே இருக்கிறது.

    இந்த மூன்று காலத்தின் அசைவுகள் ஒரு கிடைக்கோட்டின் செயல்பாடுகளாக விளங்குகிறது.

    இறையாற்றலின் தன்மை ஒரு செங்குத்துக் கோட்டின் நிகழ்வாக உள்ளது.

    இந்த இரண்டு கோடுகளும் நிகழ்காலத்தில் தான் சந்திக்கின்றன.

    குழந்தை எப்போதும் ஆனந்தத்தில் சிரித்தபடி நமது மனதை கவர்வதற்கு காரணம், அதற்கு இறந்த காலமும் தெரியாது, எதிர்காலமும் தெரியாது.

    அதை தெரிந்து கொள்ளும் வரையில், குழந்தை நிகழ்காலத்தில் மட்டுமே இறையாற்றலின் தன்மையுடன் வளர்ந்து வருகிறது.

    நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து வந்தால், இறைவனின ஆற்றலையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    கவலை என்பதற்கே இடமில்லாமல் போய்விடும்.

    அதனால்தான், நான் மீண்டும் சொல்கிறேன்.

    ' நிகழ்காலத்தில் மட்டுமே வழுங்கள்.'

    Next Story
    ×