என் மலர்tooltip icon

    கதம்பம்

    பெரியாருக்கும் பெரியார்
    X

    பெரியாருக்கும் பெரியார்

    • மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார்.
    • தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

    1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை பெரியார் "எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கும் மேலே ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா?" என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.

    பெரியார் அப்படி கேட்டதும் "பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?" என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத் தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.

    "உங்களுக்கு எல்லாம் நான் பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்னால் கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்" என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

    -கயல்விழி

    Next Story
    ×