என் மலர்tooltip icon

    கதம்பம்

    பெண்ணின் பெருமை
    X

    பெண்ணின் பெருமை

    • பொய்மை, கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை.
    • எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்.

    1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை, கண் இன்றிக் காட்சியும் இல்லை.

    2 . பெண் கிளை, பெருங்கிளை.

    3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

    4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

    5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.

    6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள்.

    7 . பெண் பாவம் பொல்லாதது .

    8 . பெண் வாழ, பிறந்தகம் மகிழ.

    9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.

    10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்.

    11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் - வேட்லி.

    12. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.

    13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட் பைரன்.

    14 . பொய்மை, கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை - ஷேக்ஸ்பியர்.

    15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.

    16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.

    17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்

    18. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

    19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.

    20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்.

    -ஜோசப் அந்தோணி ராஜ்

    Next Story
    ×