என் மலர்tooltip icon

    கதம்பம்

    திருமணப் பொருத்தம்!
    X

    திருமணப் பொருத்தம்!

    • எத்தனை பெற்றோர்கள் அதை சாதிக்கிறார்கள்.
    • பொருத்தத்தை பெற்றோர்களின் இதயம் தீர்மானிப்பதில்லை.

    தனது பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர்கள் முதலில் சொல்கிற ஒரு வார்த்தை,

    'என் மகனுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமான பெண்ணாக பார்த்து மணம் முடிக்க வேண்டும்' என்பதுதான்.

    நியாயமான ஆசைதான்..

    ஆனால், எத்தனை பெற்றோர்கள் அதை சாதிக்கிறார்கள்.?

    பெரும்பாலும், எந்த பெற்றோர்களாலும் அதை சாதிக்க முடியாது.

    காரணம், 'பொருத்தம்' என்பதை தீர்மானிப்பது, பெற்றோர்களின் மனம்.

    இதயமல்ல..

    பொருத்தத்தை பெற்றோர்களின் இதயம் தீர்மானிப்பதில்லை.

    தேடுகிறார்கள்..

    தேடி தேடி கடைசியில் அனைத்தும் பொருத்தமாக உள்ளது என்று ஒரு பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

    இப்படி நடக்கும் திருமணங்களில்,

    கணவன் மனைவி இருவரும் அமைதியாக வாழ்வது போல் வெளி பார்வைக்கு தெரிந்தாலும் அக வாழ்க்கையில் எலியும், பூனையுமாக, வாழ்வது போன்ற வாழ்க்கை தான் பெரும்பாலும் அமைந்து விடும்.

    அன்பு, நேசம், பாசம் இந்த உணர்வுகளை வைத்துதான், இறைவன் மனிதனை படைத்திருக்கிறான்.

    பெற்றோர்கள் இவற்றை நினைத்துப் பார்ப்பதில்லை.

    அவர்களது ஆசைதான் இங்கு 'தலைமை பீடத்தில்' இருக்கிறது.

    இயற்கையின் காந்த தத்துவம் என்ன சொல்கிறது என்றால்,

    "மாறுபட்ட துருவங்களுக்கு தான் ஈர்ப்பு சக்தி உள்ளது.

    பொருத்தமான ஒத்த துருவங்களுக்கு விலக்கும் தன்மை தான் உள்ளது."

    உடல் ஜீவ காந்தத்தினால் நிரம்பியது.

    குணம் என்பதே அந்த காந்தத்தின் துருவ சக்தி.

    மாறுபட்ட குண நலன்களை உடைய மணமக்களே, சண்டையிட்டு கொண்டாலும் ஒருவரை ஒருவர் எந்த நிலையிலும் பிரியாமலும், தங்களது அக வாழ்வில் ஈர்ப்புடன் வாழ்கிறார்கள்.

    -ஓஷோ

    Next Story
    ×