என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
மாதவிடாய் பிரச்சினையா?
- இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.
- காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாயின் போது பெண்களுக்கு கொஞ்சம் வயிற்று வலி இருக்கும், சிலருக்கு வலி கொஞ்சம் அதிகமா இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவங்க அடிக்கடி உணவில் புதினா சட்னி சேத்துக்கறது நல்லது.புதினா ஜுஸ் கூட குடிக்கலாம்.
சிலர் சூதக வலியால் ரொம்ப கஷ்ட படுவாங்க, அவங்க இளநீரில் சிறிது தேன் கலந்து குடித்து வரலாம்.
சிலருக்கு உரிய காலத்தில் மாதவிடாய் ஆகாது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று ஆவதால் ரொம்ப கஷ்டப்படுவாங்க, இதற்கு மாதவிடாய் ஆகவேண்டிய ஆறு நாட்கள் காலை வெறும் வயிற்றில் வல்லாரை கீரை, வேலிப்பருத்தியிலை சம அளவு எடுத்து அரைத்து ஒரு கோலிக்கா அளவு உண்பது நலம்,இதை ஒழுங்குக்கு உட்பட்டு வரும் வரை தொடரலாம்.
மாத விலக்கின் போது அந்த மூன்று நாட்களுக்கு பெரும் துன்பமா இருக்கும், இவங்க அந்த மூன்று நாட்களுக்கு முன்னரே மூன்று நாட்கள் இரவு உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது,
இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.
காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும், பின்னர் திடீரென மருமாதம் மாதவிடாய் வெளியாகாமல் நின்றும் விடும், இப்படி ஆகும் போது வலி ரொம்ப அதிகமாகி கஷ்டம் கொடுக்கும், சில சமயங்களில் அதிக அளவில் வெளியாகியும் கஷ்டம் கொடுக்கும், சாதாரணமாக வெளியேராமல் கட்டி, கட்டியா வெளியேறியும், துன்பம் கொடுக்கும்,
இவங்களுக்கு துளசி ஒரு நல்ல மருந்து, 1/4கிளாஸ் துளசி சாறுடன் 1ஸ்பூன் தேன் கலந்து, ஒரு மண்டலம் குடிக்க வேண்டும், நிவர்த்தியாகும். இதனால் இரத்த சுத்தி ஏற்பட்டு வயிறு, இருதயம், வலிமையாகும்.
சிலருக்கு சரியான நாட்களில் மாத விலக்கு ஆனாலும் கூட அது சரிவர வெளியாவதில்லை, சிலருக்கு அதிக அளவில் வெளியாகி அடி வயிற்றில் வலியை உண்டாக்கி களைப்பாக்கி விடும்,
இதற்கு தினம் காலை,மாலை, பிரண்டை உப்பை, வெண்ணையுடன் உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாகவே மாதவிடாய் பிரச்சினைகளுக்கு, விதையுள்ள கருப்பு திராட்சைப் பழம் மாமருந்து. மாதவிலக்கு ஆகவேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே திராட்சைப் பழங்களை கொஞ்சம் கூடுதலாக உண்டு வரவேண்டும்,
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக மாதவிடாய் கோளாறு களைப் போக்கிட திராட்சைப் பழங் களை உட்கொள்வது நலம்.
-கவி மரபு வைத்தியம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்