என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
வண்ணங்களும் எண்ணங்களும்
- நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
- ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.
வண்ண மருத்துவம் என்பது வண்ண நீர் பருகுதல், ஜெம்கற்கள், சூரியஒளி மூலமாகவும் மற்றும் மின்சார பல்புகள், வண்ண பில்டர் பேபர்கள் மூலமாகவும் உடம்பில் வண்ண ஒளிக்கற்றைகளை பரவச் செய்யும் பல வழி முறைகளைக் கொண்டது. மேலும் வண்ண உடைகள், வீடுகளில் செய்யும் வண்ண அலங்கார பூச்சுக்களின் மூலமாகவும் நமக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
நவரத்தினங்கள் ஒவ்வொன்றும் வண்ணங்களின் சுரங்கமாக விளங்குகிறது. இதன் ஒளிக்கதிர் வீச்சுக்கள் எப்போதும் வண்ணக் கதிர்களை வெளியேற்றிக் கொண்டுடிருக்கின்றன.
மாணிக்கம்– சிவப்பு வண்ணம்
முத்து- ஆரஞ்சு வண்ணம்
மரகதம்- பச்சை வண்ணம்
பவளம்- மஞ்சள் வண்ணம்
கனகபுஷ்பராகம்- நீல வண்ணம்
வைரம்- இண்டிகோ வண்ணம்
நீலம்- வயலட் வண்ணம்
கோமேதகம்- அல்ட்ரா வயலட் வண்ணம்
வைடூரியம்- இன் ப்ராரெட் வண்ணம்
அதைப் போல நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.
சூரியன்- சிவப்பு- மாணிக்கம்
சந்தரன்- ஆரஞ்சு- முத்து
செவ்வாய்- மஞ்சள்- பவளம்
புதன்- பச்சை- மரகதம்
குரு- நீலம்- புஷ்பராகம்
சுக்கிரன்- இண்டிகோ- வைரம்
சனி- வயலட்- நீலம்
ராகு- அல்ட்ரா வயலட் - கோமேதகம்
கேது- இன்ப்ரா ரெட்- வைடூரியம்
உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும், சூட்சும வண்ணங்கள், அதன் கதிர் வீச்சுக்கள் அவைகளுக்கு ஏற்ற உருவத்துடன் இருக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் உற்பத்தி ஆகும் எண்ணமும் அதற்குரிய தொனி- வண்ணம் உருவம் இணைந்து தான் செயல்படுகிறது. இது தான் இயற்கையின் நியதி.
மனிதனது நல்லது- கெட்டது போன்ற எண்ணங்களினால் அவனது சூட்சும சரீரத்தில் வண்ணங்களின் தன்மைகள் மாறுபட்டு விடுகின்றன. ஆகவே எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் சரீரத்தில் தொடர்பு இருக்கின்றது.
உடல் நிலை கோளாறுகளுக்கு சூட்சும நிற பரிகாரங்கள். உடல் கோளாறுகளுக்கு ஏற்ப உடைகள் மற்றும் போர்வையை பயன் படுத்தவும்.
சிகப்பு: இருமல், ஜலதோஷம், மஞ்சள்காமாலை, தோலில் வெண் புள்ளி.
ஆரஞ்சு: கல்லீரல், கிட்னி, மூட்டு வலி, தன்னம்பிக்கை இல்லாமை..
மஞ்சள்: மலம் சார்ந்த பிரச்னை, மற்றும்வயிறு சார்ந்த பிரச்சனைகள்..
பச்சை: நெஞ்சு (மார்பு), கண். இரத்தநோய்கள், மற்றும் புற்று நோய்கள்..
நீலம்: ஆஸ்துமா, மூச்சு சம்பந்த நோய்கள், பல், மூக்கு, காது, மற்றும் நுரையீரல் நோய்கள்.
வெளிர் நீலம்: வாய், தொண்டை, மற்றும் உயர்இரத்த அழுத்தம், அதிக வியர்வைக்கு.
ஊதா: இள நரை, முடி உதிர்தல் போன்றவற்றுக்கு
-சிவசங்கர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்