என் மலர்
கதம்பம்

பிரச்சினைகளை தீர்க்கும் பரிகாரம்
- பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.
- நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்ப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
பச்சைக் கற்பூரத்தையும் படிகாரத்தையும் வீட்டில் இப்படி வைத்தால் பற்றாக்குறையாகவே இருக்கும் பணம் பல மடங்கு உங்களிடத்தில் சேமிப்பாக தங்கும்.
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருள் 2.
சிறிதளவு பச்சை கற்பூரம்,
ஒரு சிறிய துண்டு படிகாரம்.
முதலில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும்.
அது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, கடன் தொல்லை ஆக இருக்கலாம். வேலை கிடைக்காமல் இருக்கலாம். வருமானம் குறைவாக இருக்கலாம். உங்கள் வீட்டில் சுப காரிய தடை இருக்கலாம். உங்கள் பிள்ளை சரியாக படிக்காமல் இருக்கலாம். எதுவாக இருக்கட்டும்.
எடுத்து வைத்திருக்கும் வெள்ளை காகிதத்தில் உங்களுடைய பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த பேப்பரை மடித்து கொள்ளுங்கள்.
இந்த பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.
அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்யும்போது நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும்.
உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும். குறிப்பாக அந்த பேப்பரில் உங்களுடைய பிரச்சினையை எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா. அந்த பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
- ஆர்.எஸ். மனோகரன்






