என் மலர்
கதம்பம்

ஆரோக்கியத்துக்கு ஆறு வழிகள்
- உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது.
- முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திர துணையின்றி செய்யுங்கள்.
பசி..
உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா? தெரியாதல்லவா? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?
யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.
பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? எனவே பசித்த பின்னர் புசிக்க வேண்டும்
தாகம்..
அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. ஏசியில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
எனவே தாகம் எடுக்கும்போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
உடல் உழைப்பு..
ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.
இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துணையின்றி செய்யுங்கள்.
யாருக்கு தூக்கம் வரும்.?
உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.
ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பகலில் உறங்கி சமன் செய்து விடலாம் என நினைக்காதீர்கள். இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி. இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்கள் வரும்.
ஓய்வு..
உடல் கேட்கும்போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.
மன நிம்மதி..
ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.
இவ்வாறு மனதையும் நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்.
-ஆதவன்






