என் மலர்tooltip icon

    கதம்பம்

    மருந்தாகும் மலர்கள்
    X

    மருந்தாகும் மலர்கள்

    • மல்லிகைப்பூற்கு கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி உண்டு.
    • மகிழம்பூவின் மணம் கண் நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

    மணம் வீசும் மலர்களில் மருத்துவ குணங்களும் நிரம்ப உள்ளன. அவற்றைப் பார்ப்போம்:-

    இலுப்பைப் பூ:

    இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.

    ஆவாரம்பூ:

    ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

    அகத்திப்பூ:

    அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

    நெல்லிப்பூ:

    நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கும் இது உகந்தது.

    செம்பருத்திப்பூ:

    இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

    ரோஜாப்பூ:

    ரோஜாப்பூவின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

    முருங்கைப்பூ:

    முருங்கைப்பூ ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

    மல்லிகைப்பூ:

    மல்லிகைப்பூற்கு கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

    குங்குமப்பூ:

    குங்குமப்பூவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

    மகிழம்பூ:

    மகிழம்பூவின் மணம் கண் நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

    தாழம்பூ:

    தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

    - சிங்காரவேலு பாலசுப்பிரமணியம்

    Next Story
    ×