என் மலர்
கதம்பம்

மரணம் என்பது அவ்வளவு தான்...
- உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?
- நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.
மரணம் என்பது மன மயக்கங்களில் மிகப்பெரிய மயக்கம்.
அந்த மயக்கத்தை தோற்றுவிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது தான்..
ஆத்மாவும் உடலும் தொடர்பறுந்து போகின்றன. இதுதான் மரணத்தில் நிகழ்கிறது.
ஆனால் இந்த உடலோ, ஆத்மாவோ இல்லாமல் போய்விடுவதில்லை.
ஏற்கனவே மரணித்துப் போனது என்பதால் இந்த உடலுக்கு மரணம் இல்லை.
உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?
நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.
அதுவே ஜீவிதம், அதுவே உயிர். பிறகு உயிர் எப்படி சாக முடியும்?
இரண்டும் நம்மில் இணைந்து இருக்கின்றன.. .
இந்த இணைப்பு துண்டித்து போகிறது..
ஆத்மா உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது..
மரணம் என்பது அவ்வளவுதான்.
உடல் திரும்ப ஜடத்துக்கு போய் சேர்ந்து விடுகிறது..
மண்ணுக்குப் போய் சேர்ந்து விடுகிறது.
ஆத்துமாவோ இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு கருப்பையை நாடுகிறது. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் ஒரு சந்தர்ப்பம் தேடுகிறது.
ஆசைகள் எல்லாம் கழிந்து விட்டன என்றால்..
ஏக்கங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன என்றால்..
உடல் எடுத்து வரும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.
அப்போது ஆத்மா நித்திய பிரஞ்ஞைக்குள் நுழைந்து விடுகிறது.
-ஓஷோ






