என் மலர்
கதம்பம்

பெரும் பலன் தரும் பிரண்டை
- வாய்வுக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது.
- இந்த மாதிரி ரொம்ப எளிமையான வைத்தியம் நம்ம கையில இருக்கும்போது நாம ஏன் எது எதையோ தேடிப்போகணும்..?
`பிரண்டை தெரியுமா..?'னு கேட்டா பலபேர் `அது என்ன செடியா?.. இல்ல கொடியா?'னு கேக்குறாங்க. பிரண்டை நல்லதொரு மூலிகை. ஆனால் வெறும் கையால் அதை உடைத்தால் கைகளில் நமைச்சல் எடுக்கும்.
வாய்வுக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது. வயிறு உப்பிசத்துக்கு நண்பர் ஒருவர் ஏதேதோ வைத்தியம் செய்து பார்த்தும் பலனளிக்காத பட்சத்தில், நான் சொன்னபடி பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டார். நாலைந்து நாட்களில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொன்னார்.
பிரண்டைத்து வையல் செய்றது எப்படின்னு தெரியாதவங்க இங்கே படிங்க...
பிரண்டைத் தண்டுகளோட மேல் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்கணும். தேவைப்பட்டா உளுந்து, தேங்காய் சேர்த்து வதக்கி அரைக்கலாம். சிலபேர் கடுகு, உளுந்து சேர்த்து தாளிப்பாங்க. அப்படி ரெடியான துவையலை சாதத்தோட சேர்த்துப் பிசைஞ்சி சாப்பிடலாம்.
இந்த மாதிரி செய்தா குடல் வாயு சரியாகுறதோட ரத்த மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகளும் விலகிரும்.
இந்த பிரண்டைத் துவையலை நம்மளோட தினசரி உணவில் சேர்த்துக்கிட்டா உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகள் பலப்படும். பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துட்டு வந்தா எலும்புகள் உறுதியா வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் சீக்கிரமா ஒண்ணு சேர்றதுக்கு இது உதவும்.
இந்த மாதிரி ரொம்ப எளிமையான வைத்தியம் நம்ம கையில இருக்கும்போது நாம ஏன் எது எதையோ தேடிப்போகணும்..?
-மரிய பெல்சின்






