என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. #Ramadan
சென்னை:
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.
ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான-தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில் முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே ரமலான் நோன்பின் சிறப்பாகும்.
நோன்பின் இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. #Ramadan #RamadanMubarak #RamadanKareem
Next Story






