search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒமைக்ரான் ஊரடங்கை தவிர்க்க இதை செய்ய வேண்டியிருக்கும் - வைரலாகும் தகவல்

    இந்தியாவில் ஒமைக்ரான் ஊரடங்கை தவிர்க்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி இருக்கும் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியாவில் இதுவரை 83 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு என்ற அளிவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல இந்தியாவில் பரவ துவங்கி இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு மிக வேகமாக பரவக்கூடியது என சமீபத்தில் உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்தது. 

    இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக ஏற்பட இருக்கும் ஊரடங்கை தவிர்க்க ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்தும் முறையை பைசர் நிறுவன ஆய்வாளர்கள் பரிந்துரைப்பதாக கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதே தகவலை நம்ப வைக்கும் விதமாக செய்தி குறிப்பு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது. வைரல் ஸ்கிரீன்ஷாட் செய்தி, 'ஒமைக்ரான் காரணமாக பிறப்பிக்கப்பட இருக்கும் ஊரடங்கை தவிர்க்க வாராந்திர தடுப்பூசி முறை தேவைப்படலாம்,' எனும் தலைப்பு கொண்டுள்ளது. 
     
    இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் செய்தி உண்மையானது இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், இதே செய்தி நகைச்சுவை கலந்த தகவல்களை பதிவிடும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வலைதளத்திலேயே இது அன்றாட நகைச்சுவையை வழங்கும் தளம் என குறிப்பிட்டு இருக்கிறது. அந்த வகையில் வாராந்திர தடுப்பூசி முறை பற்றி பைசர் ஆய்வாளர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×