search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இப்படி செய்தால் இலவச ரீசார்ஜ்? அரசு அறிவிப்பு என வைரலாகும் தகவல்

    கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு மூன்று மாத இலவச ரீசார்ஜ் செய்யப்படும் என்பது போன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில், அரசு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் அல்லது வி இணைப்பில் ஒன்றை பயன்படுத்தினால் இந்த சலுகையை பெற முடியும். கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்தால், உங்களுக்கு ரீசார்ஜ் செய்யப்படும். இந்த சலுகை டிசம்பர் 20 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     கோப்புப்படம்

    இதுகுறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய தகவலலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது. 

    அந்த வகையில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×