என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
இப்படி செய்தால் இலவச ரீசார்ஜ்? அரசு அறிவிப்பு என வைரலாகும் தகவல்
Byமாலை மலர்14 Dec 2021 6:13 AM GMT (Updated: 14 Dec 2021 6:13 AM GMT)
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு மூன்று மாத இலவச ரீசார்ஜ் செய்யப்படும் என்பது போன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில், அரசு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் அல்லது வி இணைப்பில் ஒன்றை பயன்படுத்தினால் இந்த சலுகையை பெற முடியும். கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்தால், உங்களுக்கு ரீசார்ஜ் செய்யப்படும். இந்த சலுகை டிசம்பர் 20 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய தகவலலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது.
அந்த வகையில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X