என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காபூல் விமான நிலையத்தில் குழந்தையுடன் நிற்கும் வீரர் - வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்24 Aug 2021 5:22 AM GMT (Updated: 24 Aug 2021 5:22 AM GMT)
காபூல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது அந்நாட்டு ராணுவ வீரர் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியது முதல் காபூல் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆப்கனில் வசித்து வந்தவர்கள், குடும்பத்தோடு அந்நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரிகார்டுகளை கடக்க வெளிநாட்டு ராணுவ வீரர்கள் உதவி செய்யும் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ராணுவ வீரர் கையில் குழந்தையுடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது அமெரிக்க நாட்டு ராணுவ வீரர் என்றும் அவர் ஆப்கன் குழந்தையை காப்பாற்றியதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரர் பிரிட்டன் படையை சேர்ந்தவர் என தெரியவந்தது. காபூல் விமான நிலையத்தின் நிலவரம் பற்றிய செய்தி தொகுப்பை தனியார் செய்தி நிறுவனம் உருவாக்கியது. விமான நிலையத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரல் புகைப்படம் எடுக்கப்பட்டது. முதலில் குழந்தை அதன்பின் குழந்தையின் தாய் பேரிகார்டை கடந்து வந்துள்ளார்.
குழந்தையை ராணுவ வீரர் பத்திரமாக மீட்டதாகவும், குழந்தையின் தாய் அவராகவே பேரிகார்டை கடந்து வந்தார் எனவும் புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வைரல் புகைப்படத்தில் இருப்பது அமெரிக்க நாட்டு ராணுவ வீரர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X