என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி - வைரல் தகவலை நம்பாதீங்க
Byமாலை மலர்6 July 2021 5:25 AM GMT (Updated: 6 July 2021 5:25 AM GMT)
மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக கூறும் தகவல் குறித்து மத்திய அரசு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 4 ஆயிரம் வழங்குவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவலை தொடர்ந்து மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. இந்த தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவலில், 'மத்திய அரசு கொரோனா நிவாரண நிதி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்க இருக்கிறது,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி என கூறி வைரலாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். முன்னதாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்க இருப்பதாக கூறும் தகவல் வைரலானது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X