என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தேர்தல் - தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கம்யூனிஸ்டு தலைவர்கள் பிரசாரம்
Byமாலை மலர்24 July 2019 9:45 AM GMT (Updated: 24 July 2019 9:45 AM GMT)
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டுள்ளது.
வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்திட உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டுள்ளது.
வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்திட உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X