search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி
    X

    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி

    4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந்தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #Edappadipalaniswami #ADMK #TNAssemblyByElection #TNElections2019
    சென்னை :

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    மே 1-ந் தேதி - சூலூர் தொகுதி. மே 5-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 6-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 7-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 11-ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி. மே 12-ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 13-ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி. மே 14-ந் தேதி - சூலூர் தொகுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×