search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்
    X

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்

    விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கு வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜன் தலைமையில் ஏட்டுகள் துரைவேந்தன், பாலமுருகன், சத்யபிரியா ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 890 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் விக்கிரவாண்டி செ.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (வயது 26) தனியார் பைனான்ஸ் கம்பெனி பிரதிநிதியாக இருப்பது தெரியவந்தது.

    அவரிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லை.

    இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 15 லட்சத்து 90 ஆயிரத்து 890 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம், தாசில்தார் சுந்தர்ராஜன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

    பின்னர் விழுப்புரம் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.  #LokSabhaElections2019

    Next Story
    ×