search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா சந்தித்த காட்சி.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா சந்தித்த காட்சி.

    சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா சந்திப்பு

    சேலத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். #LoksabhaElections2019 #Edappadipalaniswami #PreamalathaVijayakanth
    சேலம்:

    தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர், கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு சேலம் திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.


    இருவரும் சுமார் 10 நிமிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் எல்.கே.சுதீஸ் மற்றும் இவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். #LoksabhaElections2019 #Edappadipalaniswami #PreamalathaVijayakanth
    Next Story
    ×