என் மலர்
செய்திகள்

அ.ம.மு.க.வில் அனுபவம் வாய்ந்தவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் - தினகரன்
எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். #LSPolls #TTVDhinakaran #AMMK
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். முன்னாள் அமைச்சர்கள், பழனியப்பன், ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன் ஆகியோர் எம்.பி. தேர்தலில் நிற்க விருப்பப்பட்டனர். அதனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ. தேர்தலில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி உடல்நிலை காரணமாக போட்டியிட விரும்பவில்லை என்றார். அதனால் அவருக்கு பதில் கட்சி நிர்வாகி நிறுத்தப்பட்டுள்ளார். எங்கள் கட்சியின் சின்னம் 25-ந்தேதி தெரியவரும்.
இந்த தேர்தலில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர் தோல்வி அடைவார்கள். எங்கள் கட்சி சார்பில் ஜெயிக்கும் எம்.பி.க்கள்தான் பிரதமரை தேர்வு செய்யும் நிலை உருவாகும்.
நான் 23 வயதில் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவன். எனவே கருத்து கணிப்பு படி நீங்கள் நினைப்பது நடக்காது. அரசியலில் 3 பிளஸ்-1 என்றால் 4 கிடையாது. பூஜ்ஜியம் கூட ஆகலாம். டேபிளில் உட்கார்ந்து கணக்கு போடுவது உங்கள் ஆசைக்கு சரியாக இருக்கும். நடைமுறையில் சாத்தியமில்லை.
எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்திலும் எங்களால் ஆட்சி மாறும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TTVDhinakaran #AMMK
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். முன்னாள் அமைச்சர்கள், பழனியப்பன், ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன் ஆகியோர் எம்.பி. தேர்தலில் நிற்க விருப்பப்பட்டனர். அதனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ. தேர்தலில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி உடல்நிலை காரணமாக போட்டியிட விரும்பவில்லை என்றார். அதனால் அவருக்கு பதில் கட்சி நிர்வாகி நிறுத்தப்பட்டுள்ளார். எங்கள் கட்சியின் சின்னம் 25-ந்தேதி தெரியவரும்.
இந்த தேர்தலில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர் தோல்வி அடைவார்கள். எங்கள் கட்சி சார்பில் ஜெயிக்கும் எம்.பி.க்கள்தான் பிரதமரை தேர்வு செய்யும் நிலை உருவாகும்.
நான் 23 வயதில் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவன். எனவே கருத்து கணிப்பு படி நீங்கள் நினைப்பது நடக்காது. அரசியலில் 3 பிளஸ்-1 என்றால் 4 கிடையாது. பூஜ்ஜியம் கூட ஆகலாம். டேபிளில் உட்கார்ந்து கணக்கு போடுவது உங்கள் ஆசைக்கு சரியாக இருக்கும். நடைமுறையில் சாத்தியமில்லை.
எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்திலும் எங்களால் ஆட்சி மாறும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TTVDhinakaran #AMMK
Next Story






