என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
- தனியார் நிறுவன ஊழியரான பூவேந்தனுக்கு கடன் தொல்லை இருந்தது.
- சின்னம்மாபேட்டை ரெயில்வே பாதை அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் பின்புறம் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து பூவேந்தன் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாடிநல்லூர் கிராமம், எஸ்.பி.நகர் பகுதி சேர்ந்தவர் பூவேந்தன் (வயது40). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடன் தொல்லை இருந்தது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் திருவாலங்காடு அருகே உள்ள சின்னம்மாபேட்டை ரெயில்வே பாதை அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் பின்புறம் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து பூவேந்தன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






