search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
    X

    உயிரிழந்த பேச்சிமுத்து

    திருச்செந்தூரில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

    • பேச்சிமுத்து நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு பேச்சிமுத்து சென்று வீட்டின் கதவை திறக்கும்படி கூறியுள்ளார்.
    • அதற்கு அந்த பெண் கதவை திறக்காததால், விரக்தி அடைந்த பேச்சிமுத்து வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 25). இவர் திருச்செந்தூர் கோவிலில் அன்னதான திட்டத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு பேச்சிமுத்து சென்று வீட்டின் கதவை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் கதவை திறக்காததால், விரக்தி அடைந்த பேச்சிமுத்து வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×