என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- வாலிபர்கள் கைது
    X

    பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- வாலிபர்கள் கைது

    • ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு 2 பேர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் தமிழ்ச்செல்வி பொது இடத்தில் மது குடிக்க கூடாது என்று கூறினார். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பெயர் கொந்தளம்புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன்ரஞ்சித் (22) என்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×