search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது
    X

    கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது

    • கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம வெள்ளிமலை அருகே தாழ்தேவனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 21) இவர் கர்நாடகா மாநிலம் சிங்கமங்களூர் அருகே பண்ணூர், கங்கவெள்ளி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு அந்த பெட்டி கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது மைனர் பெண்ணிடம் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர் மைனர் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவருடன் போனில் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் சொந்த வேலைகா ரணமாக ஊருக்கு திரும்பி வந்து விட்டார். சம்பவத்தன்று மைனர் பெண் சேகரிடம் தொலை பேசியில் பேசினார். அப்போது நானும் உங்கள் ஊருக்கு வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு சேகர் புறப்பட்டு வா என சொல்லியுள்ளார். அதன்படி மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார். அவர்களை சேகர் தாழ் தேவனூருக்கு அழைத்துச் சென்றார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 3- ந் தேதி சேகர் மைனர்பெண்ணை (17) என்பவரை பரிகம் கிராமத்தில்உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வும், மைனர் பெண்ணிடம் சேகர் உல்லாசமாக இருந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேகர் வீட்டில் இல்லாதபோது மைனர் பெண் தனது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.

    Next Story
    ×