search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் கார், மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    நாமக்கல்லில் கார், மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.
    • நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கலர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரித்த னர். விசாரணையில் அவர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் திருடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எங்கு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×