என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற வாலிபர் கைது
    X

    சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற வாலிபர் கைது

    • சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த தேவக்கோட்டையை சேர்ந்த வீரமணி (வயது 31), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×