என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
நெல்லையில் பெயிண்டரை தாக்கிய வாலிபர் கைது
By
மாலை மலர்21 Oct 2023 9:16 AM GMT

- மணிகண்டன் புகையிலை பொருட்களை கடத்தி வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- பெயிண்டர் லட்சுமணன் என்பவரிடம் இசக்கி பாண்டி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் உடையார். இவரது மகன் இசக்கி பாண்டி (வயது21). இவரது கார் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இசக்கிபாண்டிக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற மணிகண்டன் புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்தபோது மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இசக்கி பாண்டி ஆத்திரத்தில் மணிகண்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணிகண்டனின் மாமனார் பெயிண்டர் லட்சுமணன் (58) என்பவரிடம் தகராறு செய்து தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி பாண்டியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
