search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து  திருடிய வாலிபர் கைது
    X

    சரவணன்.

    தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

    • தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் ரவிசேகர்(வயது58). இவர் வ.உ.சி மார்க்கெட் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதர் நகரை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) என்பவர் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் ரவிசேகர்(வயது58). இவர் வ.உ.சி மார்க்கெட் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.2,500-ஐ திருடி சென்றனர்.

    அதே நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன்ரோடு எஸ்.எஸ். மூர்த்தி தெருவில் உள்ள ஒரு மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூ. 16,000-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 கடைகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதர் நகரை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) என்பவர் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர். கைதான சரவணன் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 12 திருட்டு வழக்குகள் உள்ளது.

    Next Story
    ×