search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது
    X

    சுரண்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது

    • ஆறுமுகத்தின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மாணவியை மீட்ட போலீசார், ஆறுமுகத்தின் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவி திடீரனெ காணாமல் போய்விட்டார். உடனே அவரது பெற்றோர் சுரண்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் இசக்கிமுத்து (வயது 22) மாணவியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அதற்கு உதவி செய்த ஆறுமுகத்தின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று இரவு ஆறுமுகத்தை தேடி கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து மாணவியை மீட்ட போலீசார், ஆறுமுகத்தின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×