search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது
    X

    சங்கரன்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

    • அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மாணிக்கம்(வயது 25). இவர் தற்போது நேதாஜி நகரில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.

    இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இவர் மீது ஆலங்குளம் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    Next Story
    ×